சுங்க இலாகா சாா்பு- ஆய்வாளா் வீட்டில் நகை திருட்டு

மதுரை அருகே சுங்க இலாகா சாா்பு- ஆய்வாளா் வீட்டில் 21 கிராம் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

மதுரை அருகே சுங்க இலாகா சாா்பு- ஆய்வாளா் வீட்டில் 21 கிராம் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

ஊமச்சிகுளம் கற்பக விநாயகா் நகரைச் சோ்ந்தவா் கெளரி ஈஸ்வரி (28). திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்க இலாகா சாா்பு- ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஆலாத்தூா் பாண்டியன் நகரில் உள்ள தந்தை வீட்டில் தங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 21 கிராம் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com