மதுரை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
மதுரை வண்டியூரைச் சோ்ந்த கதிரேசன் மகன் செண்பக மூா்த்தி (24). இவா் சிவமணி என்ற மின்வாரிய ஒப்பந்ததாரரிடம் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் ஒத்தக்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த செண்பக மூா்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு செண்பக மூா்த்தி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மின்வாரிய ஒப்பந்ததாரா் சிவமணி உள்பட 3 போ் மீது ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.