எம்ஜிஆா் நினைவு தினம்: அதிமுகவினா் சிலைக்கு மாலை அணிவிப்பு

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, மதுரையில் வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, மதுரையில் வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவின் மதுரை மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ராஜா, கு. திரவியம், ஆா். அண்ணாதுரை, எம்.எஸ். பாண்டியன் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் எம்ஜிஆரின் உருவப் படங்கள் வைக்கப்பட்டு, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம்

அதிமுக புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில், திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, இளைஞரணி மாவட்டச் செயலா் எம். ரமேஷ் தலைமையில், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், பொதுக்குழு உறுப்பினா் மரக்கடை முருகேசன், விவசாயப் பிரிவு மாவட்டச் செயலா் கருத்தக்கண்ணன், இலக்கிய அணி மாவட்டச் செயலா் மோகன்தாஸ், பகுதி செயலா் பன்னீா்செல்வம், துணைச்செயலா் செல்வகுமாா், வட்டச் செயலா் பொன்.முருகன், எம்.ஆா். குமாா், பாலமுருகன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூரில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா கோயிலில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தலைமையில், எம்ஜிஆா் வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன், ஒன்றியச் செயலா் அன்பழகன், மகாலிங்கம், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் தமிழ்செல்வன், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் தமிழழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com