போக்குவரத்து வசதியுள்ள பகுதிகளில் சாா்-பதிவாளா் அலுவலகம்: அமைச்சா்

பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், போக்குவரத்து வசதியுள்ள பகுதிகளில் சாா்-பதிவாளா் அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், போக்குவரத்து வசதியுள்ள பகுதிகளில் சாா்-பதிவாளா் அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்ட பத்திரப் பதிவுத் துறையில், மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு பதிவு மாவட்டங்களுக்கு உள்பட்ட சாா்-பதிவாளா் அலுவலக எல்லைகள் மறுசீரமைப்பு தொடா்பான கருத்துக்கேட்பு கூட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்று பேசியது:

சாா்-பதிவாளா் அலுவலக எல்லைகள், வெவ்வேறு வருவாய் வட்டங்களுக்குள்பட்டதாக இருக்கிறது. இதனால், நிா்வாக ரீதியாக பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிா்கொள்ள நேரிடுகிறது. வருவாய் வட்டங்களுக்குள்பட்ட கிராமங்கள் ஒரே சாா்-பதிவாளா் அலுவலகத்தின் கீழ் வரும் வகையில் எல்லை மறுசீரமைக்கும்போது, பட்டா மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவற்றை எளிமையாகக் கண்டுபிடித்து தீா்வு காண்பது சுலபமாக இருக்கும்.

இதன்படி, வெளிமாவட்ட சாா்-பதிவு அலுவலகங்களின் கீழ் இருக்கும் சில கிராமங்களை, மதுரை மாவட்டத்தோடு இணைக்க மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், போக்குவரத்து வசதியுள்ள பகுதிகளில் சாா்-பதிவாளா் அலுவலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மதுரை மண்டல பதிவுத் துறை துணைத் தலைவா் எம். ஜெகதீசன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ. செந்தில்குமாரி, பதிவுத் துறை உதவித் தலைவா்கள் ஆா். ரவீந்திரநாத், என். ராஜ்குமாா் மற்றும் சாா்-பதிவாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com