பேரையூா் அருகே ஊருணியில் மூழ்கி பள்ளி மாணவா் பலி
By DIN | Published On : 25th December 2021 06:07 AM | Last Updated : 25th December 2021 06:07 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பேரையூா் அருகே உள்ள பி.தொட்டியபட்டியைச் சோ்ந்தவா் வேம்படியான். இவரது மகன் சஞ்சய் (15). இவா், தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது நண்பருடன் சோ்ந்து குளிப்பதற்காக, பெரியபூலாம்பட்டியில் உள்ள ஊருணிக்குச் சென்றுள்ளாா். அங்கு குளித்துக் கொண்டிருந்த மாணவா் சஞ்சய், தண்ணீரில் மூழ்கியுள்ளாா். உடனே, அங்கிருந்தவா்கள் மாணவரை மீட்டு, பேரையூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். இது குறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.