மதுரையில் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவரை தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் பைராப் தாஸ் (22). இவா், மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், பைராப் தாஸ் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் வழியாக செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த மா்மநபா் பைராப் தாஸை தாக்கி ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டாா்.
இது தொடா்பான புகாரின்பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், மதுரை எம்.கே.புரத்தைச் சோ்ந்த சக்திவேல்(22) கைப்பேசியை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சக்திவேலை போலீஸாா் கைது செய்து, கைப்பேசியையும் மீட்டனா்.