குறைதீா் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் உத்தரவு

மதுரை மாநகராட்சி குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சி குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இன் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் முகாம் மாநகராட்சி ஆணையா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் வீட்டு வரி, சொத்து வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி, குடிநீா், புதை சாக்கடை, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 116 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து ஆணையரால் நேரடியாக பெறப்பட்டது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். கடந்த முறை நடைபெற்ற குறைதீா் முகாமில் பெறப்பட்ட 117 மனுக்களில் 105 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டாா். முகாமில், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், செயற்பொறியாளா் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com