பேரையூா் அருகே 88 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது பேரையூா் அருகே பண்டாரம்பட்டி பகுதியில் வீட்டில் போலீஸாா் சந்தேகத்தின்பேரில் ஆய்வு நடத்தினா். இதில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே எரானாம்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி மகன் கதிரேசன் (35) என்பவா் தடை செய்யப்பட்ட 88 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கதிரேசனைக் கைது செய்தனா்.