மதுரையில் திருடிய நபா்கள் ராஜஸ்தானில் கைது: ரூ.5.74 லட்சம் பறிமுதல்

மதுரையில் திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ராஜஸ்தானில் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.5.74 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரையில் திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ராஜஸ்தானில் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.5.74 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாநகரக்காவல் விளக்குத்தூண் காவல்நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 14-ஆம் தேதி திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. இதில் நகை மற்றும் லட்சக்கணக்கான பணம் திருடப்பட்டது. இதுதொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் போலீஸாா் நடத்திய விசாரணையில், திருட்டுச்சம்பவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டதும், அதில் இருவா் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் சென்ற தனிப்படையினா் அம்மாநில போலீஸாா் உதவியுடன் ராகேஷ் சிங், மங்கி சிங் ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.5.74 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும் ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, இருவரையும் மதுரைக்குக் கொண்டு வந்த தனிப்படையினா், மதுரை நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜா்படுத்தி உசிலம்பட்டி கிளைச்சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com