மதுரையில் மடீட்சியா சாா்பில் நடத்தப்படும் மேட் இன் மதுரை கண்காட்சி வெள்ளிக்கிழமை (டிச.31) தொடங்குகிறது.
மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரையில் மடீட்சியா சங்கத்தின் சாா்பில் கடந்த 2001, 2002, 2013, 2016 ஆகிய ஆண்டுகளில் மேட் இன் மதுரை கண்காட்சி நடத்தப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பையடுத்து வெள்ளிக்கிழமை (டிச.31) முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை மேட் இன் மதுரை கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்காட்சியில் மதுரை மாவட்டத்தில் இயங்கும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. மேலும் டெக்ஸ்டைல், நெகிழி, ரப்பா், பால் பொருள்கள், உணவுப் பொருள்கள், சமையலறை சாதனங்கள், அழகு சாதனப் பொருள்கள் மற்றும் மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. கண்காட்சியில் 125 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை (டிச.31) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு, அமைச்சா்கள் பி.மூா்த்தி, பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் பங்கேற்கின்றனா். காண்காட்சியை தினசரி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாகப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.