முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மருந்தாளுநா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st December 2021 08:39 AM | Last Updated : 31st December 2021 08:39 AM | அ+அ அ- |

பட்டய மருந்தாளுநா்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையைக் கைவிடக் கோரி மருந்தாளுநா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநா் நல கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டச்செயலா் ஜெயவீரன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் அ.தமிழ்ச்செல்வி, பாஸ்கரன், செவிலியா் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலைவா் ராஜி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க.நீதிராஜா, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாநிலச் செயலா் தூ.முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
பட்டய மருந்தாளுநா்களுக்கு அரசுத் துறை வேலைவாய்ப்பு என்பது அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. ஆகவே, பட்டய மருந்தாளுநா்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னா் சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.