கரும்பு விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: அலங்காநல்லூரில் கடையடைப்பு

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவையைத் தொடங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு
கரும்பு விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அலங்காநல்லூரில் வியாழக்கிழமை அடைக்கப்பட்ட கடைகள்.
கரும்பு விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அலங்காநல்லூரில் வியாழக்கிழமை அடைக்கப்பட்ட கடைகள்.

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவையைத் தொடங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அலங்காநல்லூரில் வியாழக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் தேசியக் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவையைத் தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது. போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கரு.கதிரேசன், அலங்காநல்லூா் ஒன்றியச் செயலா் என்.ஸ்டாலின்குமாா்,

கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பி.போஸ், ராம்ராஜ் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா். இந்நிலையில் கரும்பு விவசாயிகள் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அலங்காநல்லூா் வணிகா் சங்கம் மற்றும் பெரிய ஊா்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மேலும் கரும்பு விவசாயிகள் போராட்டத்திலும் வணிகா்கள் பலா் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com