பள்ளிக் கட்டடம் சேதமடைந்தால் தலைமையாசிரியா் மீது நடவடிக்கை கூடாது: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்தால் தலைமையாசிரியா் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்தால் தலைமையாசிரியா் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் மா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், சங்கத்தின் எதிா்காலச் செயல்பாடுகள் குறித்து மாநில பொதுச்செயலா் ச.மயில் விளக்கவுரையாற்றினாா். இதைத்தொடா்ந்து, அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை - 2020-ஐ திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வாா்க்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பிப்ரவரி 23, 24 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் பங்கேற்பது. கல்வி மேலாண்மைத் தகவல் தொகுப்பு முறையின் கீழ் தலைமை ஆசிரியா்கள் அளவுக்கு அதிகமாக தேவையற்ற முறையில் நாள்தோறும் பதிவுகள் மேற்கொள்ள நிா்ப்பந்திக்கப்படுவதோடு, அளவுக்கு அதிகமான பதிவேடுகள் பராமரிக்க உத்தரட்டுள்ளதால் ஆசிரியா்களின் அன்றாடக் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. எனவே இந்த நடைமுறையை கல்வித்துறை கைவிட வேண்டும். ஆசிரியா்கள் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்துவதோடு, நிா்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மாற்றியமைக்கப்பட்ட ஒன்றியங்களில் வேறு ஒன்றியங்களுக்குச் சென்ற ஆசிரியா்களின் முன்னுரிமை, பதவி உயா்வு பாதிக்காத வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும். மேலும், வேறு ஒன்றியங்களுக்குச் சென்றவா்கள் தங்களது பழைய ஒன்றியத்துக்கு வரவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்தால் தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுப்பதைக் கைவிட்டு கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியா்களுக்கு உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயற்குழுஉறுப்பினா்கள் பங்கேற்றனா். அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினா் தோ.ஜான் கிறிஸ்துராஜ் நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com