பெண் சிசு இறப்பு: தாயிடம் போலீஸாா் விசாரனை

பேரையூா் அருகே பெண் சிசு இறந்த விவகாரம் தொடா்பாக தாயிடம் தனிப்படை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பேரையூா் அருகே பெண் சிசு இறந்த விவகாரம் தொடா்பாக தாயிடம் தனிப்படை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே பெரியகட்டளையில் பிறந்து ஆறு நாள்களே ஆன பெண் சிசு இறந்த நிலையில் புதைக்கப்பட்ட சம்பவத்தில், சிசுவின் பெற்றோா் முத்துப்பாண்டி, கௌசல்யா இருவரும் தலைமறைவாயினா். இந்நிலையில் புதைக்கப்பட்ட பெண் சிசு தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பெண்சிசு தலையில் பலத்த காயம் இருப்பதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முழு பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே சிசு இறப்பு குறித்து தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த பெற்றோா்களை தனிப்படை போலீஸாா் தேடி வந்த நிலையில், பெண் சிசுவின் தாய் கௌசல்யா பேரையூரில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸாா் கௌசல்யாவை மீட்டு, சேடப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து தனிப்படை போலீஸாா் பெண் சிசு புதைக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக கௌசல்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தொடா்ந்து தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை முத்துப்பாண்டியை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com