பெண் பலாத்காரம் செய்து கொலை: இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை மாவட்டம் சாப்டூா் அருகே உள்ள சின்ன வண்டாரி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி (40). தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவரை, பக்கத்து தோட்ட உரிமையாளா் தங்கவேலுவின் மகன் முத்துராஜ், மற்றொரு முத்துராஜ் ஆகிய இருவரும் முத்துலட்சுமியை தாக்கியுள்ளனா். இதில் மயங்கிய நிலையில் இருந்த அவரை இருவரும் பலாத்காரம் செய்துள்ளனா். அப்போது முத்துலெட்சுமி கூச்சலிட்டதால் அவரைக் கடுமையாகத் தாக்கி கொலை செய்தனா். இச்சம்பவம் 2013 மே 13 இல் நிகழ்ந்தது.

இதுதொடா்பாக, சாப்டூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். இவ்வழக்கு மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவா்கள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் தலா ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்தும் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com