மதுரை மத்தியச் சிறையில் கைதிகள் மோதல் எதிரொலி: சிறைக் கண்காணிப்பாளா் இடமாற்றம்

மதுரை மத்தியச் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் எதிரொலியாக சிறைக் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன் கடலூா் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

மதுரை மத்தியச் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் எதிரொலியாக சிறைக் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன் கடலூா் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

மதுரை மத்தியச் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள மருது சேனை அமைப்பின் தலைவா் ஆதிநாராயணனை, இரு கைதிகள் தாக்கியதையடுத்து, சிறைக்குள் மோதல் வெடித்தது. கைதிகள் கற்களை வீசி தாக்கிக் கொண்டனா். மேலும் சிறையின் மதில் மேல் ஏறி நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, சிறைக்காவலா்கள் மற்றும் மாநகர போலீஸாா் சிறைக்குள் சென்று மோதலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். சிறையில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக சிறை அதிகாரிகள் அளித்தப் புகாரின்பேரில் கரிமேடு போலீஸாா் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், கைதிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் எதிரொலியாக மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன், கடலூா் மத்தியச் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். மதுரை மத்தியச் சிறையின் புதிய கண்காணிப்பாளராக வசந்த கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதனிடையே, சிறை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com