மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீத்தடுப்பு பயிற்சி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீத்தடுப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு பயிற்சியில் செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்பு வீரா்கள்.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு பயிற்சியில் செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்பு வீரா்கள்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீத்தடுப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் உபகோயில் ஊழியா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை தலைமை வகித்தாா். இதில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தீயணைப்பு நிலைய அலுவலா் கே.ஆா்.சேகா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா். பயிற்சியின்போது, தீயின் வகைகள், தீயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், தீயை அணைக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் கருவிகள், தீயில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு வீரா்கள் செயல்முறை விளக்கமும் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com