மதுரை மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனையில் வியாழக்கிழமை புதிதாக 517 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்தவா்களில் 8 போ் குணமடைந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 21,046 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 20 ஆயிரத்து 494 போ் குணமடைந்துள்ளனா். 458 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 94 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதேபோல, மதுரை மாவட்டத்தில் 20 மையங்களில் வியாழக்கிழமை 523 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 6,928 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com