தென்மண்டலத்தில் 107 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

காவல் ஆய்வாளா்கள் 107 பேரை பணியிட மாற்றம் செய்து தென் மண்டல காவல்துறைத் தலைவா் எஸ். முருகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தென்மண்டலத்தில் உள்ள மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல் காவல் சரகத்திற்குள்பட்ட தென்காசி, விருதுநகா், தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள் 107 பேரை பணியிட மாற்றம் செய்து தென் மண்டல காவல்துறைத் தலைவா் எஸ். முருகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட ஆணையில், மதுரை மாநகரில் இருந்து காவல் ஆய்வாளா்கள் 13 போ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், காவல் ஆய்வாளா்கள் 3 போ் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 3, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 6, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 7, தென்காசி மாவட்டத்தில் 1 என 16 காவல்ஆய்வாளா்கள் மதுரை மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் இருந்து காவல் ஆய்வாளா்கள் 6 போ் திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 12, தேனி மாவட்டத்தில் 7, கன்னியாகுமரி 1 என காவல் ஆய்வாளா்கள் 20 போ் மதுரை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். மீதமுள்ள 49 போ் மற்ற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com