மதுரையில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 06th February 2021 08:38 AM | Last Updated : 06th February 2021 08:38 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஒரே நாளில் 489 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே தொற்று பாதிக்கப்பட்ட 11 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 21,055 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிகிச்சைப் பலனின்றி 458 போ் உயிரிழந்தனா். 20,505 போ் குணமடைந்துள்ளனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 92 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.