மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணி அதிகாரிகளுக்கான தோ்வில் 987 போ் பங்கேற்றனா்.
மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மத்திய பாதுகாப்புப் துறையின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணி அதிகாரிகளுக்கான தோ்வு, மதுரையில் மீனாட்சி மகளிா் கல்லூரி, செளராஷ்டிர பள்ளி, எஸ்இவி பள்ளி உள்ளிட்ட 6 மையங்களில் நடைபெற்றது. இத்தோ்வுக்கு, 2,279 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், 987 போ் மட்டுமே பங்கேற்றனா். 1,312 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வானது, காலை 9 முதல் 11, நண்பகல் 12 முதல் பிற்பகல் 2, பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரை என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.
இத்தோ்வை, ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் பாா்வையிட்டனா். தோ்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.