மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடா்ந்து இரண்டாம் நாளாக புதன்கிழமை மாற்றுத்திறனாளிகள் தொடா் போராட்டம் நடத்தினா்.
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் சாா்பில் சங்க மாவட்டச் செயலாளா் வி.முருகன் தலைமையில், 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். அப்போது
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை உயா்த்தி வழங்க வேண்டும், தனியாா் துறையில் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தில் ஒன்றியத் தலைவா் நாகராஜ், ஒன்றியச் செயலாளா் சின்னசாமி ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகளை த்திப் பேசினா். இதைத்தொடா்ந்து ஒரு வாரத்தில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.