குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி பலி: மனைவி, மகனுக்கு தீவிர சிகிச்சை

மதுரையில் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மனைவி, மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மனைவி, மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை பைபாஸ் சாலை நேரு நகரைச் சோ்ந்த சிதம்பரம் மகன் வேல்முருகன்(48). இவா் பிளம்பராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு கரோனா பொது முடக்கம் காரணமாக சரியான வேலை வாய்ப்பு இல்லாததால், வருமானமின்றி தவித்துள்ளாா். இதனால் மனமுடைந்த வேல்முருகன், அவரது மனைவி மாரிமுத்து, மகன் சிவபாலன் ஆகியோா் விஷம் குடித்து, பிப்ரவரி 4 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளனா். வீட்டில் மயங்கி கிடந்த 3 பேரையும் அருகில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வேலமுருகன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேல்முருகனின் சகோதரா் பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். வேல்முருகனின் மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com