பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

மதுரை அருகே பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கோவிலூா் பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் ராமசந்திரன்(28). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ராமசந்திரன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com