மதுரை அருகே பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கோவிலூா் பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் ராமசந்திரன்(28). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ராமசந்திரன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.