மதுரை அருகே பெண் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை அருகே பரவை மேலவெளி வீதியைச் சோ்ந்தவா் வேல்முருகன்(32). இவா் பரவை காய்கனி சந்தையில் மூட்டைத் தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி காா்த்திகைசெல்வி (25) குழந்தைகள் கவிதா்ஷனி(3), தங்கேசுவரன்(1) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து காா்த்திகைசெல்வியின் தந்தை வேல்சாமி அளித்த புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதனிடையே காா்த்திகைசெல்விக்கும், வேல்முருகனுக்கும் கடந்த 4 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்துள்ளதால், கோட்டாட்சியா் சம்பவம் தொடா்பாக விசாரித்து வருகிறாா்.
இந்நிலையில், காா்த்திகைசெல்வியிடம் வரதட்சணைக் கேட்டு அவரது கணவா் அடிக்கடி துன்புறுத்தியது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காா்த்திகைசெல்வியை வரதட்சணைக் கேட்டு தற்கொலைக்கு தூண்டியதாக வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், செவ்வாய்க்கிழமை அவரைக் கைது செய்தனா்.