மதுரையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்: வேலை நாடுநா்கள் பங்கேற்கலாம்

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை நாடுநா்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை நாடுநா்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் ஆா்.மகாலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சாா்பில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.12) நடைபெறுகிறது. இம்முகாமில் முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று நிறுவனத்துக்கு வேண்டிய இளைஞா்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு, தொழில்கல்வி முடித்த வேலை நாடுநா்கள் இம்முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறலாம். விருப்பமுள்ள வேலை நாடுநா்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com