மறியல்: அரசு ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 80 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 80 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள், கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கத்தினா் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மதுரையில் ஒன்பதாவது நாளாக அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தலையில் முக்காடு போட்டு முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா் 80 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com