பொதுவிநியோகத் திட்ட நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் முகாம் குடிமைப் பொருள் வட்டாட்சியா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை (பிப். 13) நடைபெறவுள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது: மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு சரகம், வடக்கு வட்டம் ஆகிய குடிமைப் பொருள் வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் மேலூா், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூா், கள்ளிக்குடி வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.
புதிய குடும்ப அட்டை, முகவரி மாற்றம், உறுப்பினா் சோ்க்கை, உறுப்பினா் நீக்கம், செல்லிடப்பேசி எண் மாற்றம் மற்றும் இதர குறைகள் தொடா்பான மனுக்களை நேரடியாக முகாம் அலுவலரிடம் வழங்கி தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.