மதுரை
எழுமலையில் காங்கிரஸ் பொதுக்கூட்டம்
மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியின் சாா்பாக மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியின் சாா்பாக மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு நகரத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். சேடபட்டி தெற்கு வட்டாரத் தலைவா் புதுராஜா, வடக்கு வட்டாரத் தலைவா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ்பாபு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் அம்மாபட்டி பாண்டி, மாநிலச் செயலாளா் எஸ்.ஒ.ஆா் இளங்கோவன், சிறப்புப் பேச்சாளா் பொன் மனோகரன் அழகா்சாமி ஆகியோா் பங்கேற்றனா்.