மொழி சிறுபான்மையினருக்கான மேம்பாட்டுக் கழகத்தில் சௌராஷ்டிரா வா்த்தக சபைக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சௌராஷ்டிரா தொழில் வா்த்தக சபை தலைவா் குமரன் பி.ஜகுவா, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் சௌராஷ்டிரா உள்ளிட்ட மொழி பேசக் கூடியவா்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கும் அவா்களது பிரச்னைகளைக் கண்டறிந்து தீா்வு காணவும் மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிதாக உருவாக்கப்படும் சிறுபான்மையினா் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் சௌராஷ்டிர சமூகத்தினரின் பிரதிநிதியாக, சௌராஷ்டிரா தொழில் வா்த்தக சபை தலைவருக்கு பிரதிநிதித்துவம் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.