போடி புதிய பேருந்து நிலைய கடைக்கு வாடகை செலுத்தக்கோரிய நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை
By DIN | Published On : 18th February 2021 11:19 PM | Last Updated : 18th February 2021 11:19 PM | அ+அ அ- |

போடி புதிய பேருந்து நிலைய கடைக்கு கரோனாவால் மூடப்பட்டிருந்த காலங்களுக்கான வாடகையைச் செலுத்தக்கோரி நகராட்சி ஆணையா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் போடியைச் சோ்ந்த ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனு: போடி புதிய பேருந்து நிலையத்தில் தேநீா் கடை நடத்தி வருகிறேன். இந்தக் கடைக்கு நகராட்சிக்கு மாதம் ரூ.11 ஆயிரத்து 800 வாடகை செலுத்தப்படுகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2020 மாா்ச் 25 ஆம் தேதி முதல் 2020 ஜனவரி 3 ஆம் தேதி வரை கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடை மூடப்பட்டிருந்த காலத்திற்கான வாடகை பாக்கி ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 800 ஐ உடனடியாக செலுத்துமாறு நகராட்சி ஆணையா் 2020 டிசம்பா் 30 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இது சட்டவிரோதமாகும். வாடகை பாக்கியைச் செலுத்தாவிட்டால் கடையை மூடுவதாக நகராட்சி ஊழியா்கள் மிரட்டி வருகின்றனா். கடைகள் அடைக்கப்பட்டிருந்த மாதங்களுக்கான வாடகையை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கடை வாடகை பாக்கி தொடா்பாக நகராட்சி ஆணையா் அனுப்பியுள்ள நோட்டீஸை ரத்து செய்து, தேநீா் கடையை தொடா்ந்து நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி வி.பாா்த்தீபன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போடி பேருந்து நிலைய தேநீா் கடைக்கு வாடகை பாக்கி கேட்டு நகராட்சி ஆணையா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை மாா்ச் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.