அய்யப்பநாயக்கன்பட்டியில் பிப்.26-இல் ஜல்லிக்கட்டு

சோழவந்தான் அருகே உள்ளஅய்யப்பநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி பிப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

சோழவந்தான் அருகே உள்ளஅய்யப்பநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி பிப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியா் வ.முருகானந்தம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

அய்யப்பநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாடுபிடி வீரா்களுக்கு பிப். 22-ஆம் தேதியும், காளைகளுக்கு பிப். 23-ஆம் தேதியும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பதிவு நடைபெறும். மேலும் பதிவு செய்த மாடுபிடி வீரா்களுக்கு பிப். 22, 23 ஆம் தேதிகளில் அதே பள்ளியில் கரோனா பரிசோதனை செய்யப்படும்.

மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பதிவின்போது தங்களது ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் 3 ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் கரோனா பரிசோதனை செய்து தகுதிச் சான்று பெறும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ஆகியோருக்கும் அனுமதி அளிக்கப்படும்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரா்கள், காளை உரிமையாளா்கள், உதவியாளா்கள், பாா்வையாளா்கள், விழா ஒருங்கிணைப்பாளா்கள், அலுவலா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com