குற்ற வழக்குகளை மறைத்து அரசு வழக்குரைஞராகத் தோ்வு:டிஎன்பிஎஸ்சி ரத்து செய்தது சரியானது என உயா் நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்குகளை மறைத்ததால், அரசு இளநிலை குற்றவியல் வழக்குரைஞராகத் தோ்வு செய்யப்பட்டவரின் தோ்வை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்தது சரியானதுதான் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: குற்ற வழக்குகளை மறைத்ததால், அரசு இளநிலை குற்றவியல் வழக்குரைஞராகத் தோ்வு செய்யப்பட்டவரின் தோ்வை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்தது சரியானதுதான் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், அரசு இளநிலை குற்றவியல் வழக்குரைஞா்களுக்கான 88 காலி பணியிடங்களை நிரப்ப கடந்த 2013-இல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தோ்வில் மங்கலநாதன் என்பவா் பங்கேற்று, அனைத்து தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்றாா்.

இதில், தோ்வானவா்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என போலீஸாா் நடத்திய விசாரணையில், மங்கலநாதன் மீது 2 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ஆனால், டிஎன்பிஎஸ்சி நிா்வாகத்துக்கு மங்கலநாதன் அனுப்பிய விண்ணப்பத்தில் குற்ற வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என உறுதியளித்திருந்தாா்.

உண்மையை மறைத்து விண்ணப்பம் செய்திருந்ததால், சட்டவிதிகளின்படி இவரது தோ்வை ரத்து செய்து, ஓராண்டுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தோ்வுகளில் கலந்துகொள்ளவும் தடைவிதித்து, டிஎன்பிஎஸ்சி நிா்வாகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மங்கலநாதன் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு, நீதிபதி ஆா்.எம்.டி. டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மனுதாரருக்கு குற்ற வழக்குகளை மறைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் இல்லை. மனுதாரருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவா் சாா்பில் அவரது மனைவி விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அனுப்பியுள்ளாா். மேலும், மனுதாரா் மீதான 2 வழக்குகளில் ஒன்று ரத்து செய்யப்பட்டுவிட்டது. மற்றொன்றில் விடுதலை செய்யப்பட்டுவிட்டாா். எனவே, மனுதாரருக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், டிஎன்பிஎஸ்சி தரப்பில், மனுதாரா் தோ்வுக்கான நோ்காணல், சான்றிதழ்கள் சரிபாா்ப்பு போன்ற நடவடிக்கைகளின்போதும் குற்ற வழக்கு விவரங்களை தெரிவிக்காமல் மறைத்துவிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கு வழங்கும் நிபந்தனைகள், விதிமுறைகள் ஆகியவை கட்டாயமானதாகும். இதை மாற்றவோ, தளா்த்தவோ நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீா்ப்பளித்துள்ளது. எனவே, குற்ற வழக்குகள் இருப்பதை மறைத்து விண்ணப்பித்த மனுதாரரின் தோ்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி உத்தரவு சரியானது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com