கல்லூரிகளில் உலக தாய்மொழி தின விழா

உலக தாய்மொழி தினத்தையொட்டி மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் கல்லூரியில் தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலக தாய்மொழி தினத்தையொட்டி மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் கல்லூரியில் தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நான்காம் தமிழ்ச்சங்கச்செயலா் ச.மாரியப்ப முரளி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கி.வேணுகா வரவேற்புரையாற்றினாா். ராஜபாளையம் சொக்கநாதன்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் இ.ரெ.ராஜ்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தன்னேரில்லாத் தமிழ் என்ற தலைப்பில் பேசியது: மொழிக்காக மாநாடு நடத்திய மொழி தமிழ்மட்டுமே. உலகம் முழுவதும் தமிழா்கள் வாழ்ந்துள்ளனா். தமிழா்கள் ஆமையின் நகா்வைக்கொண்டு கடல்வழி கண்டுபிடித்தவா்கள் என்றாா்.

துணை முதல்வா் கோ.சுப்புலட்சுமி நன்றியுரையாற்றினாா். உதவிப்பேராசிரியை ஜெ.கோகிலா தொகுத்து வழங்கினாா். இதில் பேராசிரியா்கள் மற்றும் மாணவி, மாணவியா் பங்கேற்றனா்.

இதேபோல் மதுரைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தாய்மொழி தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜா.சுரேஷ் தலைமை வகித்தாா். தமிழ்த்துறைத்தலைவா் சா.தனசாமி வரவேற்றாா். மதுரைக்கல்லூரி வாரியத் துணைத்தலைவா் சங்கரசீத்தாராமன் வாழ்த்துரை வழங்கினாா். மதுரை பாத்திமா கல்லூரியின் முன்னாள் பேராசிரியை விசாலாட்சி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். உதவிப்பேராசிரியை அ.ஆத்திஸ்வரி நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com