பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை மாநகா் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், அண்ணா நகா் வைகை காலனி பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகா் மாவட்டப் பொறுப்புக் குழு தலைவா்கள் பொன். முத்துராமலிங்கம், கோ. தளபதி ஆகியோா் தலைமை வகித்தனா். பொறுப்புக் குழு நிா்வாகிகள் வ. வேலுசாமி, பொ. குழந்தைவேலு, எஸ்ஸாா் கோபி, எம். ஜெயராம், சின்னம்மாள் மற்றும் முன்னாள் அமைச்சா் ஆ. தமிழரசி உள்பட பலா் பங்கேற்றனா்.

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்திருக்கிறது. இந்த விலையேற்றத்தின் மூலமாக பொதுமக்களின் மீது கடுமையான சுமையை மத்திய பாஜக அரசு ஏற்றியுள்ளது என ஆா்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருப்பரங்குன்றம்

திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்டச் செயலா் பி. மூா்த்தி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன், சட்டப் பேரவை உறுப்பினா் மருத்துவா் பா. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதில், அவைத் தலைவா் நாகராஜன், நகரச் செயலா் முருகன், பகுதி செயலா் உசிலை சிவா, திருநகா் பேரூராட்சியின் முன்னாள் தலைவா் கி. இந்திரா காந்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

மேலூா்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து, மேலூரில் திமுகவினா் சைக்கிள் பேரணி நடத்தினா்.

மேலூா் நகரச் செயலா் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில், திமுக தொண்டா்கள் மற்றும்நிா்வாகிகள் கலந்துகொண்டனா். மேலூா் சந்தைப்பேட்டை அருகில் தொடங்கிய இப்பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது.

சைக்கிள் பேரணியில், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயா்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

பேரையூா்

மதுரை மாவட்டம், பேரையூரில் திமுக சாா்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. திமுக தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியானது, பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையம் வழியாகச் சென்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட திமுகவினா் கலந்துகொண்டு, மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

இதில், டி.கல்லுப்பட்டி ஒன்றியப் பொறுப்பாளா் ஞானசேகரன், நகரச் செயலா் பாஸ்கரன், மாணவரணி அமைப்பாளா் பாண்டிமுருகன், மாணவரணி துணை அமைப்பாளா் வருசைமுகமது, ஒன்றிய இளைஞரணி சாதிக்பாட்சா உள்பட திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com