மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் சிவகங்கை சமஸ்தானத்துக்குள்பட்ட கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மாசித்திருவிழா பிப்ரவரி 15-இல் தொடங்கியது. கொட்டகை முகூா்த்தம், வாஸ்துசாந்தி ஆகியவற்றுடன் பிப்ரவரி 18-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மேலும் சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை மற்றும் ஞானசம்பந்தருக்கு பாலூட்டிய லீலையும் நடைபெற்றது.
இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து காலை 11.05 முதல் 11.24-க்குள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தனா். இதையடுத்து மாலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் இரவில் சுவாமி, அம்மன் திருக்கல்யாண கோலத்தில் நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். திருக்கல்யாணத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.