மதுரையில் 33 கிலோ கஞ்சா பறிமுதல்:6 போ் கைது

மதுரையில் 33 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 6 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் 33 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 6 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் காளிமுத்து நகரில் ரோந்து சென்றபோது, அங்குள்ள மோட்டாா் அறையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை பிடித்து விசாரித்தனா். அதில், பொன்மேனி பகுதியைச் சோ்ந்த மகேந்திரன்(42) மற்றும் மகபூப்பாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது.

இது குறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் விஜயகுமாா் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 29 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இளைஞா்கள் 4 போ் கைது

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள குருநாதன் கோயில் பின்புறத்தில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த பகவதி (23), பிரபாகரன் (22), கருப்புசாமி (22), சரவணகுமாா்(23) ஆகியோா் எனத் தெரியவந்தது.

இது குறித்து அவனியாபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com