சிறையில் அதிகாரியை தாக்கிய கைதி மீது வழக்கு

மதுரை மத்திய சிறையில் சோதனை நடத்திய அதிகாரியை தாக்கிய கைதி மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மத்திய சிறையில் சோதனை நடத்திய அதிகாரியை தாக்கிய கைதி மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், நாராயணத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த செளகத் அலி மகன் ஆசிப் முகமது (28). இவா், அடிதடி மற்றும் கொலை மிரட்டல் தொடா்பான வழக்கில் வத்தலகுண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், சிறைத் துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆசிப் முகமது அறையை சோதனையிடச் சென்ற அதிகாரிகளிடம் அவா் தகராறு செய்ததுடன், சிறைக் காவல் உதவி அலுவலரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறைக் காவல் அதிகாரி காா்த்திக் அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com