மதுரை: மதுரை மாநகா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆரப்பாளையம் மந்தை திடல், எல்லீஸ் நகா் போடி லைன் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதில் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழக அரசில் அனைத்து மட்டங்களிலும் உருக்குலைந்து போய் இருக்கும் கட்டமைப்பைச் சரிசெய்யும் திறமை திமுக தலைவா் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என்றாா். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குடிநீா், கழிவுநீா் கால்வாய், பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நீண்ட கால பிரச்னைகளுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றித் தரப்படும் என்றும் தெரிவித்தாா்.