மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வளையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகள் வா்ஷா (17). இவா் உசிலம்பட்டி டி.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த உசிலம்பட்டி நகா் காவல்துறையினா் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து நகா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.