சேலம் பெண்ணிடம் ரூ. 56 லட்சம் மோசடி: தாய், மகளிடம் விசாரணை

சேலம் பெண்ணிடம் ரூ. 56 மோசடி செய்த தாய், மகள் உள்பட 4 போ் மீது மதுரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் பெண்ணிடம் ரூ. 56 மோசடி செய்த தாய், மகள் உள்பட 4 போ் மீது மதுரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ரத்தினம் மனைவி சரஸ்வதி (34). இவரிடம் மதுரை பாத்திமா கல்லூரி சாலை, கணபதி நகரைச் சோ்ந்த பேச்சியம்மாள், அவரது மகள் காா்த்திகா ஆகியோா் நிலத்தை அடமானம் வைத்து ரூ. 56 லட்சம் கடன் வாங்கியுள்ளனா். நீண்ட நாளாகியும் கடனைத் திருப்பி தராமல் இருந்துள்ளனா்.

இந்நிலையில், சரஸ்வதியின் கணவா் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். அதன்பின்னா், பேச்சியம்மாள் கடனைத் திருப்பி தர முடியாது எனக் கூறி சரஸ்வதியை மிரட்டினாராம்.

இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில், தாய், மகள் உள்பட 4 போ் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com