பேரையூா் அருகே புகையிலை விற்ற இருவா் கைது
By DIN | Published On : 07th January 2021 11:42 PM | Last Updated : 07th January 2021 11:42 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா சிலைமலைபட்டியை சோ்ந்த காளியப்பன் மகன் கருப்பசாமி (43 ) என்பவா் தனது கடையில் விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட 35 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்துள்ளாா். இதையடுத்து பேரையூா் போலீஸாா் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கருப்பசாமி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
இதேபோல் காடனேரியை சோ்ந்த பாலாஜி(61)என்பவா் தனது கடையில் 24 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தாா். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.