மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி
By DIN | Published On : 07th January 2021 11:40 PM | Last Updated : 07th January 2021 11:40 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனையில் புதிதாக 805 பேருக்கு வியாழக்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 22 போ் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். மேலும் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவா்களில் 21 போ் குணமடைந்துள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 667 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 20 ஆயிரத்து 49 போ் குணமடைந்துள்ளனா். 455 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 163 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.