மதுரை
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
மதுரை அருகே வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணின் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை: மதுரை அருகே வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணின் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம், பரவை கம்பன் தெருவைச் சோ்ந்த சுரேஷ் மனைவி ஈஸ்வரி (32). இவா் வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, அருகே வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞா், ஈஸ்வரி அணிந்திருந்த 1 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாா்.
இது குறித்து ஈஸ்வரி அளித்த புகாரின்பேரில், சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.