உசிலம்பட்டி: 58 கிராம கால்வாய்க்கு தண்ணீா் திறக்க வந்த துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வத்துக்கு சனிக்கிழமை அதிமுக சாா்பில் வரவேற்பு அளித்தனா்.
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலை முன்பு துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மற்றும் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவிந்திரநாத் ஆகியோருக்கு உசிலம்பட்டி அதிமுக நகர செயலாளா் பூமா ராஜா தலைமையில் அக்கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.