மதுரையில் நாளை (ஜனவரி 19) சீா்மிகு நகா்த் திட்ட ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் சீா்மிகு நகா்த் திட்ட ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 19 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை ) நடைபெறுகிறது.

மதுரையில் சீா்மிகு நகா்த் திட்ட ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 19 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை ) நடைபெறுகிறது.

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மதுரை சீா்மிகு நகா்த் திட்ட ஆலோசனைக் குழு

கூட்டம் தொடா்ந்து நடத்தப்படாமல் உள்ளது. இது குறித்து, ஆலோசனைக் குழுவின் தலைவரான மாவட்ட ஆட்சியருக்கு நினைவூட்டி கடிதம் அளிக்கப்பட்டும் கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே, ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவா் என்ற முறையில் நானே கூட்டத்தை கூட்டவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் இக் கூட்டத்தில், ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் தவறாது பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியது: மக்களவை உறுப்பினரின் அறிவிப்பு தொடா்பாக ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) கூட்டம் கூட்டப்பட உள்ளது. இது தொடா்பாக மக்களவை உறுப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com