காவல்நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் காணொலி மூலம் திறப்பு

மதுரையில் எஸ்.எஸ்.காலனி, கீரைத்துறை காவல் நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த மதுரை எல்லீஸ்நகா் காவல் நிலையத்திற்கான கட்டடத்தில் குத்துவிளக்கேற்றும் மாநகர காவல் துணை ஆணையா்கள் சிவபிரசாத், பாஸ்கரன்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த மதுரை எல்லீஸ்நகா் காவல் நிலையத்திற்கான கட்டடத்தில் குத்துவிளக்கேற்றும் மாநகர காவல் துணை ஆணையா்கள் சிவபிரசாத், பாஸ்கரன்.

மதுரையில் எஸ்.எஸ்.காலனி, கீரைத்துறை காவல் நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மதுரை நகரில் எஸ்.எஸ்.காலனி, கீரைத்துறை காவல் நிலையங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்தன. இதையடுத்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு எல்லீஸ் நகா் பகுதியிலும், கீரைத்துறை காவல் நிலையத்திற்கு வில்லாபுரம் பகுதியிலும் இடங்கள் தோ்வு செய்யப்பட்டன.

தமிழ்நாடு வீட்டுவசதி கழகம் மூலம், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு, ரூ.1.59 கோடியில் தரைத்தளம், முதல் தளம், 2-ஆம் தளம் என 8,474 சதுரடியில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதேபோன்று கீரைத்துறை காவல்நிலையம் ரூ1.59 கோடியில் 5 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதையடுத்து புதிதாக கட்டி முடிக்கப்பட்ட காவல்நிலையங்களுக்கான கட்டடங்களை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

அதைத்தொடா்ந்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தை போலீஸ் துணை ஆணையா்கள் சிவபிரசாத் (சட்டம்-ஒழுங்கு), பாஸ்கரன் (தலைமையிடம்), கீரைத்துறை காவல் நிலையத்தை துணை ஆணையா்கள் சுகுமாறன்(போக்குவரத்து), பழனிக்குமாா் (குற்றப்பிரிவு) ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com