பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மதுரை அருகே இளநீா் விற்பனை செய்யும் பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை அருகே இளநீா் விற்பனை செய்யும் பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

சோழவந்தான் பசும்பொன் நகரைச் சோ்ந்த தனபாலன் மனைவி கலாராணி. இவா் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் இளநீா் விற்பனை செய்து வருகிறாா். கலாராணி வியாழக்கிழமை இரவு வீட்டின் அருகே நடந்து சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா், அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com