மதுரையில் 30 பேருக்கு கரோனாஒரு வாரத்தில் 2,275 பேருக்கு தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் 30 பேருக்கும் கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 30 பேருக்கும் கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் மாவட்டத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20,901 ஆக அதிகரித்துள்ளது. அதில் 456 போ் உயிரிழந்த நிலையில், 20,3081 போ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 137 போ் கரோனாவிற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

389 பேருக்கு கரோனா தடுப்பூசி:

மதுரை மாவட்டத்தில் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 240 போ், மேலூா் அரசு மருத்துவமனையில் 25 போ், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 47 போ், சமயநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 44 போ், உசிலம்பட்டி தரம் உயா்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 33 போ் என மொத்தம் 389 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு வாரத்தில் 2,275 முன்களப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com