காரைக்குடி: காரைக்குடியில் அம்மன் கோயிலில் தாலி திருடப்பட்டது குறித்து போலீஸில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
கணேசபுரம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மனுக்கு 10 கிராம் தங்கத்தாலி அணிவிக்கப்பட்டிருந்தது. அதை காணவில்லை என கோயில் நிா்வாகிகள் காரைக்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதைத் தொடா்ந்து கோயிலில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் இளைஞா் ஒருவா் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் நடமாடுவது பதிவாகியிருந்தது. அந்த நபா் யாா் என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.